அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் விபத்தில் சாவு
சென்னை:
தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாதுகாப்பாக வந்த போலீஸ்காரர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.அவரது குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.1 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் பாதுகாப்புக்காக வந்த போலீஸார் இருந்த கார் வந்துகொண்டிருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் என்ற இடத்தில் கார் வந்தபோது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலையோரம்இருந்த மரத்தில் எதிர்பாராதவிதமாக போலீஸார் வந்த கார் மோதியது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் கருணாகரன் என்ற காவலர் பரிதாபமாக இறந்தார்.மேலும் ஒரு ஏட்டு மற்றும் டிரைவர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டு அவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்த ஜெயலலிதா உடனடியாக கருணாகரனின் மனைவிக்கு இரங்கல் தெரிவித்துக் கடிதம் அனுப்பினார்.கருணாகரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர காயமடைந்த இரண்டு பேருக்கும் தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications