மதமாற்ற தடை சட்டம் நிறைவேற சிறப்பு பூஜை: வி.எச்.பி. கோரிக்கை
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்பதற்காக கோவில்களில் சிறப்புபூஜைகள் செய்யுமாறு அர்ச்சகர்களுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வி.எச்.பியின் அகில இந்திய துணைத் தலைவர் வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசிய சட்டம் கட்டாயம் நிறைவேறியே ஆக வேண்டும்.
அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும்அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும்.
கோவில் நிர்வாகிகளும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வி.எச்.பி. கேட்டுக் கொள்கிறது என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி கூடவுள்ள தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தான் இந்தச் சட்டம்நிறைவேற்றப்பட உள்ளது.
எனவே அன்றைய தினமே அனைத்துக் கோவில்களிலும் இந்த பூஜை நடைபெறுமாறு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகளுக்கு வி.எச்.பி. கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications