ஸ்டிரைக்கில் ஈடுபடாத சங்கத்துடன் பேச்சு நடத்தும் தமிழக அரசு
சென்னை:
தஅரசு ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பையடுத்து, இந்த ஸ்டிரைக்கிலேயே கலந்து கொள்ளாத தமிழ்நாடு அரசுஊழியர் ஒன்றியத்தை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
தநிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வரும் 23ம் தேதி முதல் மாநிலம்முழுவதிலும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூர்யமூர்த்தியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழகஅரசு அழைத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதையடுத்து தனது சங்கப் பிரதிநிதிகளுடன் சூர்யமூர்த்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த ஸ்டிரைக்கை ஆதரிக்கப் போவதில்லை என்று சூர்யமூர்த்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரைக்கில் ஈடுபடாத அமைப்புடன் பேச்சு நடத்தும் ஜெயலலிதா, ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ள பிற சங்கங்களைபேச்சுவார்த்தைக்கு அழைக்காதது அந்தச் சங்கங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications