வீரப்பனிடம் தூது போவதா?- கும்பிடு போட்டு மறுக்கிறார் கோபால்
சத்தியமங்கலம்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்க காட்டுக்குள் போக முடியாது என்று"நக்கீரன்" ஆசிரியர் கோபால் கூறினார்.
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோபால் நிருபகர்ளிடம்கூறுகையில்,
முன்னர் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதால் தான்வீரப்பனிடம் தூது போனோம்.
நாகப்பாவை மீட்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் தான் உண்டு. ஆனால் மனித நேயத்துடன்செயல்பட விட மாட்டார்கள்.
அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த வழக்கு. காலாவதியான வழக்கிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த பொய் வழககுதொடர்ந்துள்ளனர்.
எங்கள் நிருபர் சிவசுப்பிரமணியத்தையும் சிறையில் போலீசார் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர் ஒருதீவிரவாதி போல் தான் நடத்தப்படுகிறார்.
எந்த ரூபத்திலாவது வந்துஎங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தான் அதிரடிப்படைத் தலைவர் தேவாரம்சுற்றிக் கொண்டிருக்கிறார். பழி வாங்கும் வெறி இன்னும் அடங்கவில்லை.
எனவே இனிமேல் வீரப்பனிடம் தூதராகப் போகவே மாட்டேன். இங்கு நடப்பதும் ஜனநாயக ஆட்சியே அல்ல.சர்வாதிகார ஆட்சி என்றார் கோபால்.
-->












Click it and Unblock the Notifications