For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய-அமெரிக்க விமானப் படையினர் கூட்டாக பயிற்சி

By Staff
Google Oneindia Tamil News

ஆக்ரா:

இந்திய மற்றும் அமெரிக்க விமானப் படை வீரர்கள் ஆக்ரா அருகே கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத்துறையில் நிலவும் நல்லுறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இந்தப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 300 இந்திய விமானப்படை வீரர்களும், 150 அமெரிக்க விமானப்படை வீரர்களும் இணைந்துமேற்கொண்டுள்ள இந்தப் பயிற்சி அடுத்த ஒரு வார காலத்திற்கு நீடிக்கவுள்ளது.

கடந்த மே மாதமும் இதே இடத்தில் இரு நாடுகளின் விமானப்படை வீரர்களும் முதற்கட்டப் பயிற்சியில்ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

இந்த மாதத் துவக்கத்தில் கூட அமெரிக்காவின் அலாஸ்காவில் இரு நாட்டு வீரர்களும் கூட்டுப் பயிற்சியைமேற்கொண்டனர். அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு வெகு சமீபத்தில் தான் இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்திய, அமெரிக்க கடற்படை வீரர்கள் கொச்சி அருகே உள்ள அரபிக் கடலில்பயிற்சிகளை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வேறொரு நாட்டின் மீது போர் தொடுக்க நேரும்சூழ்நிலையில் இந்தப் பயிற்சிகள் இரு நாடுகளின் வீரர்களுக்குமே மிகவும் உபயோகமாக இருக்கும்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X