வீரப்பனுக்கு கேசட் கொடுக்க கொளத்தூர் மணிக்கு கர்நாடக நீதிமன்றம் தடை
மைசூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்தியுள்ள வீரப்பனுக்கு கொளத்தூர் மணி கேசட்டோ கடிதமோகொடுத்து அனுப்பக் கூடாது என்று கொள்ளேகால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெரியார் திராவிட கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணிபெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாகப்பாவை மீட்பதற்கு அவர் தூதராகச் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வெடிமருந்துகள் கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக கொள்ளேகால் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி நடராஜ் தூலப்பனவர் தன்னுடைய உத்தரவில் கூறியதாவது:
கொளத்தூர் மணி தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். எனவே அவர் பேசி அனுப்பும் கேசட்டையோ எழுதிஅனுப்பும் கடிதத்தையோ வீரப்பனுக்கு அளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
அவ்வாறு கேசட், கடிதம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பினால் அவ்விவரம் குறித்து முன்னதாகவே கோர்ட்டின்கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
அதேபோல் பத்திரிக்கையாளர்களையும் கொளத்தூர் மணி சந்திக்கக் கூடாது. நாகப்பா கடத்தல் விவகாரம்குறித்தோ, வீரப்பன் குறித்தோ அவர் எதையும் நிருபர்களிடம் தெரிவிக்கவும் கூடாது.
கொளத்தூர் மணியை மைசூர் சிறைக்கு மாற்றும் படி அந்தச் சிறையின் அதிகாரிகள் கோரிக்கை மனுஅளித்துள்ளனர். இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று நீதிபதி அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
பின்னர் இவ்வழக்கின் மீதான விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
கேசட், கடிதம் அனுப்புவதற்கே தயங்கும் கர்நாடக நீதிமன்றம் கொளத்தூர் மணிக்கு நிச்சயம் ஜாமீன் வழங்கும்என்பதோ, அல்லது அவரை காட்டுக்குள் தூதராக அனுப்ப சம்மதிக்கும் என்பதோ நடக்கும் காரியமாகத்தெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications