அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டியோ-ஜியோ சார்பில்காலவயைற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்குகிறது.

வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்ட சங்கங்களுடன் பேசாமல், வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லைஎன்று அறிவித்திருந்த தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் மட்டும் பேசி அரசு ஊழியர்களுக்குகூடுதல் அகவிலைப்படியை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டார்.

இது பெரும்பான்மையான அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தனது சுய நலத்திற்காகஅரசு ஊழியர்களை, அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்தி அடகு வைத்து விட்டதாகவும் அவர்கள்கடுமையாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள அகவிலைப் படி விகிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியஜாக்டியோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடங்கும் என்று அறிவித்தனர்.

அதன்படி புதன்கிழமை காலை வேலைநறுத்தம் தொடங்கியது. பெரும்பான்மையான அரசு ஊழியர்கள்ஜாக்டியோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று காலையிலேயே அரசுஊழியர்கள் கூடி அரசுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

முக்கிய அலுவலகங்களான சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகம், டி.எம்.எஸ்.வளாக அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

இருப்பினும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாததால் அங்கு வழக்கமான பணிகள்நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி ஆசிரியர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+