தமிழக சட்டசபையில் 28ம் தேதி காவிரி விவாதம்
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக வரும் 28ம் தேதி தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெறும் என்ற சபாநாயகர்காளிமுத்து கூறினார்.
சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் குழு இன்று கூடியது. கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் காளிமுத்துகூறுகையில்,
காவிரிப் பிரச்சனை தொடர்பான விவாதம் வரும் 28ம் தேதி சட்டசபையில் நடைபெறும் என்று அலுவல்ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோலவே பெரும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா குறித்து வரும் 31ம் தேதி தமிழக சட்டசபையில்விவாதிக்கப்படும்.
அன்றைய தினமே மேலும் 10 சட்ட மசோதாக்களும் கொண்டு வரப்பட்டு அவற்றின் மீதான விவாதம்நடைபெறும்.
மேலும் வரும் 30ம் தேதி தமிழக நிதி நிலைமை குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றை நிதி அமைச்சர்பொன்னையன் சமர்ப்பிக்கவுள்ளார்.
தமிழக மின் வாரியத்தின் ஆண்டுக் கணக்கு அறிக்கை தொடர்பான விவாதம் வரும் 29ம் தேதி சட்டசபையில்நடைபெறும் என்றார் காளிமுத்து.