மதமாற்ற தடுப்பு சட்டத்தை ஆதரித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தை ஆதரித்து சென்னையில் பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவுசார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு பொது மருத்துவமனைக்கு அருகே உள்ள விக்டோரியா மெமோரியல் ஹால் முன்பு இந்த ஆர்ப்பாட்டம்நடந்தது. சட்டசபை பா.ஜ.க தலைவர் லட்சுமணன், எம்.எல்.ஏவான ராஜா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் ராஜா பேசுகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களை மூடுவது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம்கூறியும் கூட அவற்றை அடைத்து விட்டு கிறிஸ்தவர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருப்பது போலக் காட்டிக் கொள்ளகிறிஸ்தவர்கள் முயலுகிறார்கள்.
ஆனால் இந்தச் சட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தைநாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றார் ராஜா.
முன்னதாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வரும்போது செய்தியாளர்களிடம் ராஜாபேசுகையில்,
இப்போது நமது நாட்டில் வெளிநாட்டு கலாச்சாரம் படையெடுத்து வருகிறது. நமது பண்பாட்டின் மீதுவெளிநாட்டினரின் பண்பாடு யுத்தம் தொடுத்துள்ளது.
எனவே இதைத் தடுக்க கண்டிப்பாக இதுபோன்ற சட்டம் தேவை. கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் அவசியமானஒரு சட்டம் தான்.
0அனைத்து மதங்களும் ஒன்று என்று கூறும்போது மதமாற்றம் செய்வது ஏன் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications