"எஸ்மா" பயத்தால் பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்
சென்னை:
போனஸ், அகவிலைப் படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மேற்கொண்டுள்ளகாலவலையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 2வது நாளாக நீடித்தது.
ஆனாலும் இன்று கணிசமான அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்பியிருந்தனர். தமிழகம் முழுவதிலும் சுமார் 70சதவீதம் அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வந்திருந்தனர்.
அதேபோல் சத்துணவு மையங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்பிவிட்டனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், தேனி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிமாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் 100 சதவீத வருகைப் பதிவு இருந்தது.
நீலகிரி, திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவிலான அரசு ஊழியர்கள்வந்திருந்தனர். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளிலும் 25 சதவீத ஆசிரியர்களே வந்திருந்தனர்.
"எஸ்மா" பயம்:
அரசு ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாலும் "எஸ்மா" சட்டம்அளிக்கும் பயத்தினாலும் பல ஊழியர்கள் பணிக்குத் திரும்பி கொண்டிருக்கின்றனர்.
எத்தனை அரசு ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளார்கள் என்ற பட்டியலை அனுப்புமாறு உயர் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
"எஸ்மா" எனப்படும் அத்தியாவசியப் பணிப் பராமரிப்புச் சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பணிக்குவராதவர்களுக்கு சம்பளப் பிடித்தம் மற்றும் கைது நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் போராட்டத்தில் முதல் நாளான நேற்றே பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான இடங்களில் ஸ்டிரைக்செய்தவர்கள் பணிக்குத் திரும்பி விட்டனர். இன்றும் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்தில் ஆஜராகிவிட்டனர்.
ஸ்டிரைக் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாகஎச்சரித்துள்ளதால் இந்த ஸ்டிரைக்கின் "சுதி" குறைந்து கொண்டே போகிறது.
பல அலுவலங்களில் "எஸ்மா" சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறித்தும், அதன் மூலம் என்னென்ன நடவடிக்கைகள்எல்லாம் எடுக்கப்படும் என்பது குறித்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications