கர்நாடகத்தில் கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
பெங்களூர்:
காவிரி விவகாரத்தில் பாத யாத்திரை நடத்தி தங்களை அரசியல்ரீதியில் ஓரம் கட்டிய கிருஷ்ணாவுக்கு எதிராக அம் மாநில எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ளன.
காவிரிப் பிரச்சனையில் முதலில் ஒவ்வொரு விஷயத்திலும் அனைத்துக் கட்சிகளைக் கூட்டி விவாதித்து முடிவெடுத்து வந்தகிருஷ்ணா திடீரென பாத யாத்திரையை நடத்தினார். இதனால் அவருக்கு அரசியல் ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் கிடைத்தது.
தனது நிலையையும் பலமாக்கிக் கொண்டார். இதனால் அதுவரை கிருஷ்ணாவை ஆதரித்து வந்த பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம்,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தன.
இப்போது கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் அனைத்து எதிர்க் கட்சிகளும்கிருஷ்ணாவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் பசவராஜ் சேடம் கூறுகையில்,
அரசியல் பாதயாத்திரை நடத்தி காவிரி விவகாரத்தையே முழு அரசியலாக்கிய கிருஷ்ணாவை தனிப்படுத்த வேண்டும் என்றார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சிந்தியா கூறுகையில்,
காவிரி ஆணையத்தை அணுகாமல் தனது அமைச்சரவையிலேயே அனைத்து முடிவுகளையும் எடுத்து கர்நாடகத்தின் நலனைகிருஷ்ணா கெடுத்துவிட்டார் என்றார்.
மதசார்பற்ற ஜனதா தளதத்தின் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,
நாங்கள் இந்த அரசுக்குத் தந்த ஆதரவை எல்லாம் பாத யாத்திரை மூலம் கொச்சைப்படுத்திய கிருஷ்ணாவை ஒழித்துக் கட்டவேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications