For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்தில் நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனம் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கிருஷ்ணாகூட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் வயலார் ரவி டெல்லியில் கிருஷ்ணாவைச் சந்தித்து இதைத்தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தைச் சமாதானப்படுத்தும் வகையில் உடனடியாக காவிரியில் நீர் திறந்துவிட காங்கிரஸ் மேலிடம்உங்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்று கிருஷ்ணாவிடம் வயலார் ரவி கூறினார்.

இதையடுத்து சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசித்த கிருஷ்ணா, இன்று காலை தான் பெங்களூர் திரும்பினார்.

தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுமாறு காங்கிரஸ் மேலிடமே உத்தரவிட்டுள்ளதால் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நீரைத் திறந்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று பெங்களூரில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X