28 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை இலங்கைக் கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்று விட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள 3 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5படகுகளில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.
இந்திய எல்லையில் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக்கடற்படையினர் அங்கு வந்து இந்திய மீனவர்களைப் பிடித்துச் சென்றனர். சில மீனவர்கள் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் 28 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications