போலீஸ் லாக்-அப்பில் இளைஞர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் போலீஸ் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் விஜயராகவன். கடத்தல் வழக்கு தொடர்பாக கடலூர் போலீஸார் இவரைவிசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சிப்காட் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவர் லாக் அப்பில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் விஜயராகவன் லாக் அப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications