For Daily Alerts
Just In
தமிழக சட்டசபையில் காவிரி தீர்மானம் ரத்து
சென்னை:
தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சினை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படாது என்று சபாநாயகர்காளிமுத்து கூறியுள்ளார்.
நேற்று சட்டசபைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் அக்டோபர் 30ம் தேதி கொண்டு வந்துநிறைவேற்றப்படுவதாக இருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பான தீர்ப்பு 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
நமது சட்டசபைக் கூட்டத் தொடரும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைவதாக உள்ளது. எனவே இதற்கு இடையில்காவிரி தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்றார் காளிமுத்து.
-->
Comments
Story first published: Wednesday, October 30, 2002, 5:30 [IST]