சென்னையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஜெ. அஞ்சலி
சென்னை:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா இன்றுகாலை மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முத்துராமலிங்கத் தேவரின் 95வது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி சென்னை நந்தனம் சேமியர்ஸ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்குஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டு, தேவர் சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஆற்காடு வீராசாமி பின்னர் வந்து தேவர் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் வேறு சில கட்சித் தலைவர்களும் தேவர் சிலைக்கு மாலைஅணிவித்தனர்.
இதற்கிடையே முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை பெரும்விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு நடந்த விழாவில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். தேவர் சமாதியிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குருபூஜையையொட்டி தேவர் ஜோதி எடுத்துச் செல்லப்படும் போது நேற்று மானாமதுரை அருகே வன்முறைவெடித்தது. இதனால் அப்பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.