போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் ஆவார்களா?
சென்னை:
வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு இன்றைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட குழுவான ஜாக்டியோ-ஜியோ இன்று முக்கியஆலோசனை நடத்தவுள்ளது.
சட்டசபையில் ஜெயலலிதா விடுத்த எச்சரிக்கையில்,
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று, வியாழக்கிழமைக்குள் பணிக்குத்திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.
மேலும் "எஸ்மா" உள்பட என்னென்ன சட்டங்கள் உள்ளதோ அத்தனை சட்டங்களின் கீழும் நடவடிக்கைஎடுக்கப்படும். போராட்டம் நடத்துபவர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு புதிய ஊழியர்களை சேர்ப்போம், புதிய ஆசிரியர்களை பணியில்சேர்ப்போம் என்று ஜெயலலிதா கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் எச்சரிக்கை குறித்து விவாதிப்பதற்காகவும், பல்வேறு சங்கங்களின் கருத்தைஅறிவதற்காகவும் ஜாக்டியோ-ஜியோ அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.
இருப்பினும் முதல்வரின் மிரட்டலுக்குப் பயப்படாது போராட்டம் தொடரும் என்றும் அதுகுறித்துஅதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என்றும் இந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.