10 கடலோர மாவட்ட மீனவர்களுக்கு ரூ.11.26 கோடி உதவித் தொகை
சென்னை:
தமிழகத்தில் உள்ள 10 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு தலா ரூ.1,200 உதவித் தொகையைமாதந்தோறும் வழங்குவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டசபையில் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் உள்ள 10 கடலோர மாவடட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மீனவர்களுக்கு தலா ரூ.1,200உதவித் தொகை வழங்குவதற்காக ரூ.11.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மீன்பிடி அதிகம் உள்ள காலங்களான ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரைஒவ்வொரு மீனவரும் மாதந்தோறும் ரூ.75 கட்ட வேண்டும். அரசி சார்பிலும் ஒரு தொகை போடப்படும்.
இந்தத் தொகை மீன்பிடி இல்லாத மாதங்களான செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,200 கிடைக்கும் வகையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர்.