லஞ்சம் வாங்கி மாட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை:
மதுரையில் லஞ்சம் வாங்கி மஞ்சள் பையில் பணத்தை வைத்திருந்தபோது பிடிபட்ட சமூக நலத்துறை கமிஷனர்கே.எம். சுப்ரமணியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சமூக நலத்துறைஅதிகாரிகளிடம் வாங்கிய ரூ.1.15 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்டார் சுப்ரமணியம்.
மாவட்ட வாரியாக லட்சம் லட்சமாக லஞ்சம் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியம், தன்னுடைய தென்மாவட்ட "வசூல்களை" முடித்துக் கொண்டு சமீபத்தில் மதுரை வந்திருந்தார்.
அப்போது தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வகையாக மாட்டிக் கொண்டார். இருப்பினும் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முதலில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பொதுத் துறை செயலாளர் பிச்சாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரமணியம் தற்காலிகமாகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கடந்த 28ம் தேதி மாலை அவருக்கு சஸ்பெண்ட் உத்தரவுவழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications