For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒலித்த மதுரை மீனாட்சி கோவில் மணி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக ஒலிக்காமல் இருந்த பிரமாண்டமான வெண்கலமணி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட 600 கிலோ எடையுள்ள பிரமாண்டமானவெண்கல மணி மீனாட்சி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டது. இதற்காகத் தனி மணி மண்டபமும் கட்டப்பட்டது.

பூஜை நேரத்தின்போது இந்த மணி ஒலிக்கும். இதன் ஓசையைக் கேட்ட பிறகு தான் ராமநாதபுரம் ராஜா தனதுபூஜையைத் தொடங்குவார் என்று வரலாறு உண்டு.

இத்தகைய பெருமை படைத்த மணி கடந்த 40 ஆண்டுகளாக ஒலிக்கவில்லை. மணியும், மணி மண்டபமும்பழுதடைந்து கிடந்தன.

இந்த நிலையில் ரூ.1.5 லட்சம் செலவில் இந்த மணிமண்டபமும், மணியும் புதுப்பிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று மீனாட்சி அம்மன் கோவிலின் வெண்கல மணி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. இனிஅனைத்து பூஜைகளின் போதும் இந்த மணி "கணீர்" என்று ஒலிக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X