சென்னையை வெளுத்துக் கட்டும் மழை: அல்லல்படும் மக்கள்
சென்னை:
சென்னை நகரின் பல பகுதிகள் மழை நீரில் தீவுகள் போல மிதக்கின்றன.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தினமும் இரவு முழுவதும் மழை பெய்கிறது.காலையில்தான் மழை நிற்கிறது.
இந்த அடை மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.
வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு பல பகுதிகளில்படகுகளையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் சாலையின் இரு மருங்கிலும் உள்ள வீடுகள், கடைகளில் நீர் புகுந்து விட்டது.அதே போல லட்சுமி நகர் பகுதியிலும் வீடுகளில் நீர் புகுந்து ஒரு ஆள் மட்டத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
வேளச்சேரியில் தண்ணீர் இந்த அளவுக்கு தேங்கி நிற்பதற்கு, மாடி ரயில் திட்டம் தான் காரணம் என்று மக்கள் புகார்கூறினர்.
ரயில் பாலங்கள் அமைப்பதற்காக மழை நீர் வடிகால் கால்வாய்களை ரயில்வே துறையினர் அடைத்து விட்டதால்ஏற்பட்ட விளைவுதான் மழை நீர் போக வழியில்லாமல் போய் விட்டதாக பொதுமக்கள் கோபத்துடன் கூறினர்.
வேளச்சேரியில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை துணை மேயர் கராத்தே தியாகராஜன், மாநகராட்சி ஆணையர்கலைவாணன் ஆகியோர் பார்த்தனர்.
இதேபோல, நுங்கம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளும் மழை நீரில் மூழ்கியுள்ளது. பெரம்பூரின் பல பகுதிகளும்நீரில் மிதக்கின்றன. ஏற்கனவே மோசமாக இருந்த பல சாலைகள் இப்போது சுத்தமாக பெயர்ந்து போய்காணப்படுகின்றன.
தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம், தொலைபேசிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார ரயில் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டது.
வழக்கம் போல் பல இடங்களில் பாதாளச் சாக்கடைகள் திறந்து கிடந்தன. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அவசரஅவசரமாக வந்து அவற்றை மூடினர்.
வேறு பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இரு சக்கரவாகனங்களில் செல்பவர்கள் தட்டுத் தடுமாறி தான் சென்று கொண்டிருக்கின்றனர். முக்கியமாக அலுவலகம்செல்பவர்கள் இதனால் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடனும் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையமும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications