ஆசிரியர்கள் போராட்டம்: பள்ளிகளில் பாடம் நடத்தும் வேலையற்ற பட்டதாரிகள்
ராமநாதபுரம்:
அரசு ஊழியர்களுடன் ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பட்டதாரிகள் கை கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பட்டினம்காத்தான் கிராமத்தில் அந்தக்கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களே பாடம் எடுத்து வருகின்றனர்.
படித்து வேலையில்லாமல் இருந்த அவர்களுக்கு இப்போது பாடம் எடுக்கும் ஆசிரியர் பணி கிடைத்துள்ளதால்உற்சாகமாக செய்து வருகிறார்கள். மாணவர்களும் புது வாத்தியார்களை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு பாடம்கற்கின்றனர்.
கிராமத்து பெரியவர்களும், பெற்றோர்-ஆசிரியர் கழகமும் இணைந்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.
அதேபோல, ஈரோடு மாவட்டம் பேரோடு கிராம ஒன்றியத் துவக்கப் பள்ளியிலும், பெற்றோர்-ஆசிரியர் கழகஏற்பாட்டின்படி பட்டதாரி பெண்களும், இளைஞர்களும் பாடம் எடுத்து வருகின்றனர்.
இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடிந்து கொள்ளாமல் அருமையாக பாடம் எடுப்பதால் மாணவர்களும் சமர்த்தாகபாடம் கற்றுக் கொள்கின்றனராம்.