For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கராச்சாரியார் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசியதாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உடனே விசாரணை அறிக்கைதாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் வக்கீலுமான சத்தியமூர்த்தி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். சிவகாசிகுற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கலானது. அதில்,

தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி மற்றும் இதர சலுகைகளை கிருஸ்துவ மதத்தில் அனுபவித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக மட்டும் இந்துமதத்துக்கு மாறுவதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

இது தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் பேச்சாகும். அவர்களை அவமானப்படுத்தி மற்றவர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டவர்கள்குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் சங்கராச்சாரியாரின் செயல் அமைந்துள்ளது.

எனவே, காஞ்சி சுவாமிகள் மீது வன்கொடுமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை நடத்திய நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன், இம் மனுவை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறுபோலீசாருக்கு உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்ட தீண்டாமை ஒழுப்புப் போலீசார் இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X