மாண்டியாவில் கலவரமும் ஊடரங்கும் தொடர்கின்றன
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
தமிழகத்துக்கு நீர் விடுவதை எதிர்த்து மாண்டியாவிலும் மைசூரிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மாண்டியாவில் இன்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஆனால், ஊரடங்கை தளர்த்தக் கோரியும் கைது செய்யப்பட்ட விவசாயச் சங்கத் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் மாண்டியாவில் சிலஇடங்களில் இன்றும் பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தினர்.
பொது மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஊரடங்குதளர்த்தப்பட்டது.
நாகமங்கலாவில் 1,000 பேர் கொண்ட கும்பல் பஸ்களை கல்வீசித் தாக்கி உடைத்தது. இந் நிலையில் மாண்டியாவில் மேலும் 3 நாட்களுக்குஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications