For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளிடம் தப்பி காஷ்மீர் முதல்வராக முப்தி பொறுப்பேற்பு

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகம்மத் சயீத் (வயது 66) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அவரது வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பாதுகாவலப் பலத்தகாயமடைந்தார். ஆனால், சயீத் தப்பிவிட்டார்.

காங்கிரஸ்- மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று பதவியேற்றது. முப்தி முகம்மத் சயீத் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர்கிரிஷ் சந்திர சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மங்கத் ராம் சர்மாபொறுப்பேற்றுக் கொண்டார். இந்த ஆட்சிக்கு சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தந்துள்ளது.

ஸ்ரீநகரில் ஷேர்-ஏ-காஷ்மீர் மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டார்.

முதல் மூன்று ஆண்டுகளுக்கு சயீத் முதல்வராக இருப்பார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராகநியமிக்கப்படுவார்.

முன்னதாக பதவியேற்பு விழா நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக முப்தி முகம்மத் சயீதின் வீட்டின் மீது தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தினர். ஆனால், அவர் உயிர் தப்பிவிட்டார். ஸ்ரீநகரில் புறநகர் பகுதியான நவ்காமில் உள்ள சயீதின் வீட்டின் மீதுஇன்று காலை 10 மணியளவில் கிரனைட் குண்டுத் தாக்குதல் நடந்தது. தீவிரவாதிகள் இரு குண்டுகளை அவரது வீட்டின் மீதுவீசினர்.

அப்போது முப்தி முகம்மத் சயீத் வீட்டில் இருந்தார். இத் தாக்குதலில் வீட்டின் வெளியே நின்றிருந்த பாதுகாவலருக்கு காயம்ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலையடுத்து பதவியேற்பையொட்டி முப்தியின் வீட்டில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள்அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இத் தாக்குதலுக்கு அல்-நசீரன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X