ரஜினியின் மக்கள் இயக்கத்திற்கு கிருஷ்ணசாமி ஆதரவு
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் துவக்கவுள்ள மக்கள் இயக்கத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிவரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய உற்பத்தியில் முக்கிய இடுபொருள் தண்ணீர்தான்.ஆனால் நல்ல மழைப் பொழிவுள்ள மலைப் பகுதிகளில் நமது நிலங்கள் இல்லை. பெரும்பரப்பு நிலம் உள்ளபகுதிகளில் நல்ல மழைப் பொழிவு இல்லை.
30 சதவீத பாசன நிலங்கள் மட்டுமே நல்ல மழைப் பொழிவைப் பெற்று வளம் பெறுகின்றன. தமிழகத்தில் பாசனப்பரப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டாலும் அது ஒரு மாயையாகவே உள்ளது.
விவசாயத்தின் மிகப் பெரிய தடுப்பாக இருக்கும் நதி நீர்ப் பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு என்பது இந்திய நதிகள்இணைக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இதற்காக ரூ. 30,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ. 5,000 கோடியாகஇருக்கும். இந்த நதிகள் இணைப்பால் வேளாண்மை செழிக்கும், பஞ்சம் பறக்கும், வறுமை ஒழியும், வேலைவாய்ப்பு பெருகும்.
வறுமை ஒழிப்பு மற்றும் நதி நீர் இணைப்பு குறித்த முயற்சிகளை நடிகர் ரஜினிகாந்த் மக்கள் இயக்கமாகஆக்கவுள்ளது பாராட்டத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
ரஜினி நடத்திய உண்ணாவிரதத்தில் அவருடன் நாள் முழுவதும் மேடையில் இருந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமிஎன்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications