வீரப்பனை சந்தித்துவிட்டு வந்த ஆதிவாசி பிடிபட்டார்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மறைந்துள்ள இடமும், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மறைத்துவைக்கப்பட்டுள்ள இடமும் அதிரடிப்படைக்குத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கன மழை பெய்வதால் உடனடியாக அந்த இடங்களை அதிரடிப்படையினரால் அடைய முடியவில்லைஎன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்று 2 மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது.
அவரை மீட்பதில் தமிழக அதிரடிபடை தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் கர்நாடக அதிரடிப்படையின் தீவிரம்குறைக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் வீரப்பனைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய ஆதிவாசி ஒருவர் கர்நாடக அதிரடிப்படை வீரர்களிடம்பிடிபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் வீரப்பன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து புதிய தகவலை கூறியுள்ளதாகத்தெரிகிறது.
மேலும் நாகப்பாவை வீரப்பன் எந்தப் பகுதியில் வைத்திருக்கிறான் என்ற விவரமும தெரிய வந்துள்ளதாககூறப்படுகிறது.
இந்தத் தகவல்களை தமிழக அதிரடிப் படையினருடன் கர்நாடகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மறுபடியும் இரு மாநில அதிரடிப்படையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆனால்காட்டுக்குள் கன மழை பெய்து வருவதால் வேகமாக முன்னேறிச் செல்ல முடியவில்லை.












Click it and Unblock the Notifications