கம்போடியா சென்றார் வாஜபாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக இன்று கம்போடியா புறப்பட்டுச் சென்றார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் தூரக் கிழக்கு நாடுகளுடனும் உறவை வலுப்படும் முயற்சியாக வாஜ்பாய் அங்கு சென்றுள்ளார்.
கம்போடியத் தலைநகர் லாவோசில் நாளை நடக்கவுள்ள முதல் இந்திய- ஆசியான் மாநாட்டில் வாஜ்பாய் கலந்து கொள்வார். தீவிரவாதஒழிப்பு மற்றும் கம்போடியுடனான வர்த்தக உறவை மேம்படுத்த அவர் அந் நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.
கடந்த ஏப்ரலில் தான் வாஜ்பாய் லாவோஸ் சென்றிருந்தார். ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அவர் அங்கு செல்வது மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
வாஜ்பாயின் வருகையையொட்டி லாவோசில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அவரது கார் செல்லும் சாலைகளில்போக்குவரத்து இன்று காலை முதலே நிறுத்தப்பட்டுவிட்டது.
டெல்லி விமான நிலையத்தில் வாஜ்பாயை துணைப் பிரதமர் அத்வானி, அமைச்சர்கள், முப்படைத் தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications