For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

13 வங்கிகளில் ரூ. 10 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் 13 வங்கிகளில் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்த நபர் வெறும் 10-வது மட்டுமே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது திறமையால்ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

தாம்பரம் ராம் காலனியைச் சேர்ந்தவர் முரளி. பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். பல்வேறு வங்கிகளுக்கும்அடிக்கடி செல்வார். அங்கு வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பணம் எடுப்பது, போடுவதை நுணுக்கமாககவனிப்பார்.

அவர்களது கையெழுத்துக்களை கவனித்துக் கொள்வார். கணக்கு எண்ணையும் தெரிந்து கொள்வார்.

அதன் பிறகு அந்த வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு செக் மூலம் பணம் எடுப்பார்.இப்படியே நகரில் உள்ள 13 வங்கிகளில் மோசடி செய்து ரூ. 10 லட்சம் பணம் எடுத்துள்ளார்.

பெரம்பூரில் உள்ள கனரா வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கிலிருந்து பணம் குறைவதாக கொடுத்தபுகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி முரளியைப் பிடித்தனர்.

லட்சுமி விலாஸ் வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் 13 கிளைகளில்மோசடி செய்துள்ளார் முரளி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X