For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் சோ.பா., இளங்கோவன்: பதவிகளை பிடிப்பதில் தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நயமனம் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்ஆலோசிப்பதற்காக கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணனும், செயல் தலைவர் இளங்கோவனும் டெல்லிசென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். பதவிகளைப் பிடிப்பதில்முன்னால் த.மா.காவினருக்கும் காங்கிரசின் பல்வேறு கோஷ்டினருக்கும் இடையே பெரும் மோதல்ஏற்பட்டுள்ளது.

பதவிகளை பகிர்த்து எடுத்துக் கொள்வது குறித்து முடிவு செய்ய கட்சித் தலைவர் சோ.பா. டெல்லி சென்றுள்ளார்.டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

அதேபோல, செயல் தலைவர்இளங்கோவனும் டெல்லி சென்றுள்ளார். இவரும் காங்கிரஸ் பதவிகள் குறித்துசோனியாவுடன் பேச உள்ளார்.

த.மா.காவினருக்கு அதிக இடம் பிடிக்க சோ.பாலகிருஷ்ணன் முயல்வார். ஆனால், காங்கிரசாருக்கே அதிக நிர்வாகப் பதவிகளைப் பெற்றுத்தர இளங்கோவன் முயன்று வருகிறார்.

வெளியில் இணைந்து செயல்படுவது போலக் காட்டிக் கொண்டாலும் சோ.பாவுக்கும் இளங்கோவனுக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. இந்த பதவிகளைப் பிடிப்பதில் இந்த மோதல் மேலும் தீவிரமாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X