2 தலை, 2 வாய், 4 காதுகளுடன் பிறந்த ஆடு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் அருகே 2 தலை, 2 வாய் மற்றும் 4 காதுகளுடன் பிறந்த ஆட்டுக் குட்டி அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே உள்ள எரூர் நடுக்குப்பம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பன். இவரது ஆடு சமீபத்தில் 3-வதுமுறையாக பிரசவித்தது. அதில் ஒரு குட்டி மட்டும் மிக வித்தியாசமாக உள்ளது.
இந்த ஆட்டுக் குட்டிக்கு 2 தலைகளும், 2 வாய்களும், 4 காதுகளும் உள்ளன. ஆனால், தலையை அதனால் தூக்கமுடியாமல் சிரமப்படுகிறது.
இரண்டு வாய்கள் மூலம் அது கத்துகிறது. தானாக பால் குடிக்க முடியாததால், பீடிங் பாட்டில் மூலம் இருவாய்களிலும் பால் ஊட்டுகிறார் சுப்பன்.
இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க சுற்றுப்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான பேர் வந்தவண்ணம்உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications