காஞ்சியில் புதிய ரயில் நிலையம் இன்று திறப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் ரூ.1.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஏ.கே. மூர்த்தி இன்று திறந்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் உள்ள மீட்டர் கேஜ் பாதைகள் அனைத்தும் கடந்த 1999ம் ஆண்டு அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டன.

இருப்பினும் இந்த ரயில் நிலையத்தில் வசதிகள் குறைவாகவும், மின்சார ரயில்கள் வந்து செல்லும் வசதிஇல்லாமலும் இருந்து வந்தது. இதனால் பொன்னேரிக் கரை அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வேதுறை முடிவு செய்தது.

இந்தப் பணிகள் ரூ.1.30 கோடி செலவில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டன. பணிகள் மந்தமாக இருந்த நிலையில்மூர்த்தி அமைச்சரானவுடன் அவர் தன் வழக்கமான "வேலைகளை"க் காட்டினார். அதன் பிறகே பணிகள் வேகமாகநடந்தன.

இதனால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பணிகள் முடிந்து, தற்போது ரயில் நிலையம் தயாராகி விட்டது. இந்தரயில் நிலையத்தில் தானியங்கி முன்பதிவு வசதி உள்ளிட்ட அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய ரயில் நிலையம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இன்று மாலை நடக்கும் இந்த விழாவில் ரயில் நிலையத்தைமூர்த்தி திறந்து வைக்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார்களான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும்ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

தமிழக போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+