For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாஜி அதிமுக அமைச்சர் திடீர் கைது: மக்கள் சாலை மறியல்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

முன்னாள் அதிமுக அமைச்சர் துரை ராமசாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் சட்டசபைத் தொகுதியில் ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்துரை.ராமசாமி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

வெள்ளக்கோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள கருமாரியம்மன் கோவில் நிர்வாகம்தொடர்பாக துரை ராமசாமிக்கும், அதிமுகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகதகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் உள்ளது.

இந்த நிலையில் கோவில் திருவிழா தொடர்பாக துரை ராமசாமிக்கு சாதகமாக கோர்ட் தீர்ப்பு வந்தது. இதையடுத்துவியாழக்கிழமை பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

ஆனால் துரை ராமசாமி உள்ளிட்டவர்களை கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று சக்திவேல் குழுவினர்மறித்ததாக தெரிகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் மூண்டது.

இதைத் தொடர்ந்து துரை ராமசாமியை போலீஸார் கைது செய்து காங்கேயம் கொண்டு சென்றனர். இதையடுத்துதுரை ராமசாமியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக துரை ராமசாமியை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X