உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பட்நாயக் பதவியேற்பு
டெல்லி:
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கோபால் பல்லவ் பட்நாயக் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல் கலாம் அவருக்கு பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
பட்நாயக் ஒன்றரை மாதங்கள் மட்டுமே இப் பதவியில் இருப்பார். அத்துடன் இவர் ஓய்வு பெறுகிறார். இவர் இந்தியாவின் 32வதுதலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் அத்வானி, சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி உளளிட்ட மத்தியஅமைச்சர்கள், உச்ச நீதின்ற நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கீர்த்தி ராவல் ஆகியோர் கலந்து கொண்டர்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் இதில் பங்கேற்க முடியவில்லை.
இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த கிர்பால் நேற்றுடன் ஓய்வு பெற்றுவிட்டார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின்துயர் துடைக்கும் வகையில் கர்நாடகத்துக்கு எதிராக கடும் தீர்ப்பு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் கிர்பால் என்பதுநினைவுகூறத்தக்கது.
-->