எய்ட்ஸ் நோய் தடுப்பிற்கு பில் கேட்ஸ் ரூ.500 கோடி உதவி
டெல்லி:
இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக ரூ.500 கோடி உதவித் தொகை அளிப்பதாக "மைக்ரோசாப்ட்"நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அறிவித்தார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று டெல்லியில் இவ்வாறு கூறினார்.
"மைக்ரோசாப்ட்" நிறுவனத்திற்குச் சொந்தமான "பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுன்டேசன்" என்ற அமைப்புஏற்கனவே இந்தியாவில் எய்ட்ஸ் நோய்த் தடுப்பிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ், எய்ட்ஸ் நோய் தடுப்புக்காக மேலும் சில திட்டங்களைஅறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்காக ரூ.500 கோடி உதவித் தொகை அளிக்கப் போவதாக பில் கேட்ஸ் இன்றுஅறிவித்தார்.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் தொகைபெரிதும் உதவும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறிய சாப்ட்வேர் ஜாம்பவானான பில் கேட்ஸ், இதுமுதற்கட்டமாக வழங்கப்படும் நிதி தான் என்றும் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications