"ஏர் ஆம்புலன்ஸ்" மூலம் நாளை அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலிமாறன் மேல் சிகிச்சைக்காக நாளை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
பூஞ்சைத் தொற்று காரணமாக உயிருக்குப் போராடி வரும் மாறனை மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவின்ஹூஸ்டன் நகரில் உள்ள "மெத்தடிஸ்ட்" என்ற புகழ் பெற்ற மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
மாறனின் மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதி சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசி மூலம்கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசே இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
மாறனை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்வதற்காக சிங்கப்பூரிலிருந்து "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் இன்றுசென்னை வந்து சேர்கிறது.
அப்பல்லோ மருத்துவமனையில் பெற்று வரும் சிகிச்சைகளை மாறன் தொடர்ந்து மேற்கொள்வதற்கு வசதியாகவேஇந்த சிறப்பு "ஏர் ஆம்புலன்ஸ்" விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் வந்து சேர்ந்ததும் நாளை அமெரிக்காவுக்கு மாறன் கொண்டு செல்லப்படுவார் என்று அப்பல்லோமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு மாறனைக் கொண்டு செல்வதற்காகஅனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு ஆம்புலன்சும் தயார் நிலையில் உள்ளது.