For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் அந்தணர்களா?"- கருணாநிதி விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக்கு தொண்டாற்றும் யாரையும் அந்தணர் என்றும் பிறர் என்றும் தரம் பிரித்துப் பார்ப்பதற்கு திமுக தலைவர்கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சமீபத்தில் சென்னையில் "தமிழுக்குத் தொண்டாற்றிய அந்தணர்கள்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சியின் நோக்கமே தவறானதாகும்.

தமிழுக்கு எத்தனையோ பேர் தொண்டாற்றியுள்ளனர். அவர்களை எல்லாம் குலம், கோத்திரம் பார்த்தா நாம்அங்கீகரித்தோம்?

அதுபோலவே எத்தனையோ அந்தணர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். சேவை புரிந்துள்ளனர்.அவர்களை எல்லாம் அந்தணர்கள் என்று குலம் பிரித்துப் பார்ப்பது சரியான செயலன்று. அந்தணர் என்பது தனிக்குலம் அன்று.

தமிழுக்குத் தொண்டாற்றுவது என்றால் சரி, அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மதத்தின் பெயரால்பிற்பட்டோரையும், பிற வகுப்பினரையும் தாழ்த்திப் பார்ப்பது, ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களைஇழிவுபடுத்தி, வேதனைப்படுத்துவதை ஏற்க முடியாது. பொறுத்துக் கொள்ளவும் மாட்டோம்.

அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரியவர்கள் என்று வேதத்தின் பெயரால் வேடம் போட்டுத்திரிபவர்களை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X