கரூர் எம்.பி. தொகுதி வாக்குகளை எண்ண உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
கரூர் எம்.பி தொகுதி வாக்குகளை மறுபடியும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால்வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னச்சாமி வெற்றி பெற்றாது செல்லாது என்று அறிவிக்கக்கோரியும்,வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரியும் திமுக வேட்பாளர் பழனிச்சாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டுவந்தன.
இந்த நிலையில், வாக்குகள் மறுபடியும் எண்ணப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில்சின்னச்சாமி மனு செய்தார்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்குகளை எண்ணுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்துவாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த புதன்கிழமை மறு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்னதாகத் தான், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதால் இப்பணியை ஒத்திவைக்க வேண்டும் என்று சின்னசாமி சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால் அதை உடனடியாக நிராகரித்த உயர் நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கஉத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. கடைசியாக16,000 ஓட்டுக்கள் வரை எண்ணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
-->
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications