தென் தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை அல்லது மிக கனத்த மழை பெய்யும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை-நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனத்த மழையோ அல்லது மிக கனத்தமழையோ பெய்யக் கூடும்.
வட தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை இருக்கலாம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்திய வட கிழக்குப் பருவ மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2,400 குளங்கள்நிரம்பி விட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications