For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் விபத்தில் இறந்தவர் குடும்பத்தினருக்கு ஜெ. நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்குதலா ரூ.50,000 நிதியுதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட இந்த மோசமான விபத்து குறித்தும், அதில் இறந்தவர்கள் குறித்தும் அறிந்துகடும் வேதனை அடைந்தேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறந்த எட்டு பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும்.

படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000 நிதியும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6000 நிதியும்வழங்கப்படும் என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X