ஆந்திர கடல் கொள்ளையர்கள் கடத்திய 54 சென்னை மீனவர்கள் மீட்பு
சென்னை:
ஆந்திரக் கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட 54 சென்னை மீனவர்கள் ரூ.70,000 பணம் கொடுத்துமீட்கப்பட்டனர்.
சென்னை காசிமேடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சல்லும் மீனவர்களை அடிக்கடி ஆந்திர மாநில கடல்கொள்ளையர்கள் வழிமறித்து, கடத்திப் பிடித்துச் சென்று வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிப் பெற்றுவருவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 54 மீனவர்களை ஆந்திர கொள்ளையர்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்.
ஆந்திர மீனவர்களின் மீன் பிடி வலைகளை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தி விட்டதாகவும், அதற்கு ஈடாகரூ.70,000 கொடுத்தால் தான் தமிழக மீனவர்களை விடுவிப்போம் என்று ஆந்திர கொள்ளையர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து காசிமேட்டிலிருந்து தமிழக மீனவர் சங்கப் பிரநிதிகள் ஆந்திராவுக்குச் சென்று அவர்கள் கேட்டபணத்தைக் கொடுத்து விட்டு மீனவர்களை மீட்டு வந்தனர்.
-->












Click it and Unblock the Notifications