மாறன் உடல் நிலையில் முன்னேற்றம்: கருணாநிதி தகவல்
சென்னை:
அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதிகூறினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாறன் மேல் சிகிச்சைக்காக சிறப்பு "ஏர்ஆம்புலன்ஸ்" விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு ஹூஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற "மெதடிஸ்ட்" மருத்துவமனையில் மாறன் சேர்க்கப்பட்டார்.
மாறனுடைய மனைவி மல்லிகா, மகன் கலாநிதி மாறன், மருமகள் காவேரி மற்றும் கருணாநிதியின் மகள் செல்விஆகியோர் பின்னர் தனியாக அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
மாறனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஹூஸ்டனில் இருந்து வரும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
ஆனாலும் அவர் முழுமையாகக் குணமடைவதற்கு இன்னும் நிறைய நாட்களாகும் என்று தெரிகிறது.
எப்படி இருந்தாலும் டிசம்பர் மாதம் வரை அவர் அமெரிக்க மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சைபெறுவார் என்று கூறினார் கருணாநிதி.
-->