கருணாநிதியும் ஆரியர்தான் .. பா.ஜ.க.
சென்னை:
நல்ல குணம் படைத்த யாருமே ஆரியர்தான். அப்படிப் பார்த்தால் கருணாநிதி கூட ஒரு ஆரியர்தான் என்றுபா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் பா.ஜ.க. இளைஞர் அணியின் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி ஆரியர்களை (பிராமணர்கள்) விமர்சித்துப் பேசுகிறார் என்ற வாதம் சரியில்லை.ஆரியர் என்பது ஒரு இனமல்ல. நல்ல குணம் படைத்தவர்கள், புத்திக் கூர்மை உள்ளவர்கள் ஆரியர்கள்.
அப்படிப் பார்த்தால், இத்தனை குணங்களும் உடைய கருணாநிதியும் கூட ஒரு ஆரியர்தான்.
அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போது காலியாகும் என்று எதிர்பார்த்திப்பதைப் போல காங்கிரஸ்நிலை உள்ளது. அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்து செய்து, அலுத்துப் போய், நடக்காமல் போய் இப்போதுதிமுகவுடன் நெருக்கமாக முயற்சிக்கிறது.
ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே தர்மசங்கடம் பா.ஜ.க.தான். எனவேதான் பாஜகவை கூட்டணியிலிருந்துவெளியேற்ற பல முயற்சிகளை அது செய்து வருகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் பெற்று வெற்றி பெறும்.
பொடாவைப் பொறுத்தவரை அதில் அரசியல் கட்சிகள் கோரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன.இருந்தும் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் கோரும் திருத்தங்கள் குறித்துஉச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்றார் இல.கணேசன்.
-->