டிராக்டர் கவிழ்ந்தது: மண்ணில் புதைந்தது 2 தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
மண் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிரைலர் கவிழ்ந்ததில் அதன் மீது அமர்ந்து சென்ற 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து இறந்தனர்.
கோவை அருகே கனுவாய் என்ற இடத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.
செங்கல் சூளைக்காக செம்மண்ணை ஏற்றிக் கொண்டு அந்த டிராக்டர் சென்று கொண்டிருந்தது. கோவையில் இருந்து 15 கி.மீ. சென்றநிலையில் அந்த டிராக்டர் நிலை தடுமாறியது.
இதில் பின்னால் இருந்த டிரைலர் கவிழந்தது. அதன் மீது அமர்ந்திருந்த தொழிலாளர்கள் கீழே விழ அவர்கள் மீது முழு செம்மண்ணும்கொட்டியது. இதில் அந்த இருவரும் மூச்சுத் திணறி மண்ணில் புதைந்தது அந்த இடத்திலேயே இறந்தனர்.
டிராக்டரின் அளவையும் மீறி பேராசைப்பட்டு மிக அதிக அளவில் மண் எடுத்துச் சென்றது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்றுதெரியவருகிறது.
-->












Click it and Unblock the Notifications