ஜாதியை கடந்த தலைவர் வாழப்பாடி: தலைவர்கள் புகழஞ்சலி
சென்னை:
ஜாதியைக் கடந்து தேசிய அளவில் தலைவராக விளங்கியவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்று முன்னாள் அமைச்சர்பன்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதில் பன்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
இப்போதெல்லாம் என்ன ஜாதி என்று பார்த்த பிறகுதான் தலைவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால்அதிர்ஷ்டவசமாக ஜாதி முத்திரையையும் கடந்து தேசிய அளவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் வாழப்பாடிராமமூர்த்தி என்றார் அவர்.
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் கடைசி வரைபாடுபட்டவர் வாழப்பாடியார் என்றார்.
மதிமுகவின் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் பேசுகையில், மத்திய
பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது ஈராக் அதிபர் சதாம் உசேனை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்வாழப்பாடியார். மத்திய அமைச்சராக மிகத் திறம்பட செயல்பட்டு பிரதமரின் நன் மதிப்பைப் பெற்றவர் என்றார்.
நிகழ்ச்சியில் ஜகத்ரட்சகன், கிள்ளிவளவன், ஏ.கே.நடராஜன், பி.சி.கணேசன், நீதிபதி கோவிந்தராஜன் உள்பட பலகட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications