ஈராக் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி:
அமெரிக்கா தனது அதிகாரத்தை ஈராக்கிடம் காட்டக் கூடாது என இந்தியா கூறியுள்ளது. ஈராக்கைத் தாக்க அமெரிக்க முழு வீச்சில்தயாராகி வரும் நிலையில் இந்தியா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் குருநானக் பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் வாஜ்பாய் கூறியதாவது:
தான் நினைப்பதை ஈராக் செய்ய வேண்டும் என்று எந்த நாடும் நினைக்கக் கூடாது. ஈராக் மீதான எந்த நடவடிக்கையையும் ஐக்கியநாடுகள் சபை மூலமாகத் தான் மேற்கொள்ள வேண்டும். எந்த தனி நாடும் அதிகாரம் செலுத்த நினைக்கக் கூடாது.
ஈராக்கில் இன்னொரு போர் நடப்பதை இந்தியா விரும்பவில்லை என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், ஈராக்கிடம் மனத குலத்துக்கு எதிரான பயங்கர ஆயுதங்கள் ஏதும் இருந்தால் அதைஅந்த நாடு தானாகவே அழித்துவிட வேண்டும்.
தங்கள் நாட்டுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அந்தந்த நாட்டு மக்களுக்கு முழு உரிமை உண்டு. இதில், அடுத்த நாடு தலையிடவேண்டிய அவசியம் இல்லை என்றார் வாஜ்பாய்.
-->












Click it and Unblock the Notifications