திறக்கப்படாமல் பாழடையும் நெல்லை புதிய பஸ் நிலையம்
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பே பல லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும்பணிகள் நடந்து முடிந்து விட்டாலும் கூட அது இன்னும் திறக்கப்படாமலே பாழடைந்து கொண்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் படு அமர்க்களமாக முடிந்துள்ள நிலையில்,தமிழகத்தில் இது போன்ற புது பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன.
திருநெல்வேலி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போவதால் நகருக்குவெளியே பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கின.
பாளையங்கோட்டை அருகே வேந்தன் குளம் என்ற இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பே பணிகள் நடந்துமுடிந்து விட்டாலும் கூட பஸ் நிலையம் திறக்கப்படாமல்உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுள்ள அந்தக் கட்டிடம் பாழடைந்து கொண்டிருக்கிறது.
இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இந்த பஸ் நிலையம் மாறி வருவதும் அம்மாநர மக்களைக்கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பஸ் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். கோயம்பேட்டில்காட்டிய அக்கறையை அதிமுக அரசு திருநெல்வேலி பக்கமும் திருப்ப வேண்டும் என்று அவர்கள்எதிர்பார்க்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications