நெல்லை, குமரியில் மழை கொட்டுகிறது: பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலன பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழை காரணமாக இந்த இரு மாவட்டங்களில் உள்ள அத்தனை அணைகளும் நிரம்பி விட்டன.
பாபநாசம் அணையில் 102 அடி நீர், சேர்வலார் அணையில் 105 அடி, மணிமுத்தாறு அணையில் 61.25 அடி,கட்னா அணையில் 78 அடி, கிருபா நதி அணையில் 49.71 அடி, குண்டாறு அணையில் 36.10 அடி நீர் உள்ளது.
அதே போல் பேச்சிப்பாறை அணையில் 27.90 அடி, பெருஞ்சானி அணையில் 62.7 அடி, சித்தாறு-1 அணையில்12.3 அடி, சித்தாறு-2 அணையில் 13.12 அடி நீர் உள்ளது.
நாகர்கோவிலில் 8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கொட்டாரத்தில் 7.2 மி.மீ. மழை பெய்துள்ளது. தொடர்ந்து இருமாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
கடுமையான மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த கடலோரப் பகுதிமீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
பள்ளிகளுக்கு விடுறை:
இதற்கிடையே கன மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
கன மழையால் திருநெல்வேலி நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்சுனில் பாலிவால் உத்தரவிட்டார்.
மேலும் வெள்ள நிவாரண நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவுபிறப்பித்தார்.
-->