லாரியை விடுவிக்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., ஏட்டு கைது
சென்னை:
சென்னையில் லாரியை விடுவிப்பதற்காக ரூ.1,500 லஞ்சம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர்கைது செய்யப்பட்டனர்.
சென்னை துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஆரோக்கியராஜ். அதேகாவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் சம்மனசு நாதன்.
கடந்த 17ம் தேதி ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி துரைப்பாக்கம் பகுதியில் ஒருவர் மீதுமோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து லாரி டிரைவரையும், லாரியையும் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரஉத்தரவிட்டார் சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ்.
இதையடுத்து லாரியையும், டிரைவரையும் மீட்பதற்காக அதன் உரிமையாளர் ராமாராவ் துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு வந்தார். அப்போது ரூ.1,500 பணம் கொடுத்தால் டிரைவரையும், லாரியையும் விடுவிப்பதாகஆரோக்கியராஜ் கூறியுள்ளார். கொடுப்பதாக கூறி விட்டு வந்த ராமாராவ், நேராக லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார்கொடுத்தார்.
இதையடுத்து கூடுதல் டிஜிபி திலவகதி உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படை ராமாராவுடன் துரைப்பாக்கம்காவல் நிலையத்திற்கு விரைந்தது. அருகிலேயே ஒரு இடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்து கொண்டனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கொடுத்தனுப்பிய பணத்தை ஆரோக்கியராஜிடம் கொடுத்தார் ராமாராவ்.அதை சந்தோஷமாக வாங்கிய ஆரோக்கியராஜ் அதை ஏட்டு சம்மனசு நாதனிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புபோலீஸார் திடீரென்று இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இருவரும் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்டனர்.
செங்கை கிழக்கு மாவட்டத்தில் லஞ்சம் வாங்கக் கூடாது என்று காவல் துறையினருக்கு கடுமையான உத்தரவுபோடப்பட்டுள்ளது. இருந்தாலும் இதுவரை லஞ்சம் வாங்கியதாக 28 காவல் துறையினர் பிடிபட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-->