வீரப்பன் சரணடைந்தால் பாதுகாப்பு தரப்படும்: கர்நாடகம் அறிவிப்பு
பெங்களூர்:
வீரப்பன் சரணைடைந்தால் அவனுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நாகப்பாவை விடுவிக்க தமிழக அரசின் உதவியோ, தூதர்களின் உதவியோ கிடைக்காமல் தவித்து வரும் கர்நாடகம் இந்தமுடிவுக்கு வந்துள்ளது.
நாகப்பா கடத்தல் விவகாரத்தில் அரசுக்கு ஜாதிரீதியில் நெருக்குதல் வரத் தொடங்கியுள்ளது. நாகப்பாவின் ஜாதியைச் சேர்ந்தமடங்களின் தலைவர்கள் அரசை குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவை இன்று விவாதித்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் பேசுகையில்,
சட்டத்துக்கு உட்பட்டு எந்தவிதமான பாதுகாப்பு வழங்க முடியுமோ அதை வீரப்பனுக்குத் தர கர்நாடகம் தயார். வீரப்பன்சரணையவும் வழி வகை செய்யத் தயாராக இருக்கிறோம். மடங்களின் தலைவர்கள் முதல்வர் கிருஷ்ணாவுடன் பேசினர்.
வீரப்பனை சரணடைய வைக்க முயல வேண்டும் என அவர்கள் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தான் அரசும்விரும்புகிறது. வீரப்பனுடன் பேச தூதரை முடிவு செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஜாமீனில் வெளியே வந்தால் கொளத்தூர் மணியையே காட்டுக்குள் அனுப்ப அரசு தயார். ஆனால், அவர் மீது பல வழக்குகள்உள்ளதால் வெளியே வருவதில் சிக்கல் உள்ளது என்றார்.
இதற்கிடையே கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்கச் செய்யும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் மீதான 5வழக்குகளையும் வாபஸ் பெறுவது குறித்தும் அரசு யோசித்து வருவகிறது.
நேற்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கிருஷ்ணா, வீரப்பன் சரணைடந்தால் அவர் மீது சட்டரீதியில் நியாயமாக விசாரணைநடத்தப்படும். வழக்கறிஞர் வைத்து போராட அவருக்கு அனுமதி தரப்படும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications